Sunday, July 31, 2011

எது காதல் ..!

மணிகணக்காக கைபேசியில் அரட்டை
வெகுநேரம் காபிஷாப்பில் சந்திப்பு 
கைகோர்த்து கடற்கரையில் நடை 
பிரிந்தவுடன் மிஸ்யூ குறுந்தகவல் ..!

இதுவா காதல் ..?




நீயும் நானும் சண்டை சச்சரவில் 
ஐம்பதுகளில் காலடி வைக்கையில் 
மருத்துவர் ஒருநாள் அறிவிப்பார் 
உனக்கு சர்க்கரை நோய் என்று ..!

அன்று சாயுங்காலம் ?




இருகோப்பையில் தேனீருடன் நான் 
எதை எடுப்பது விழிப்பாய் 
எதை வேண்டுமானாலும் எடு 
இரண்டிலுமே சர்க்கரை இல்லை ..!

கண்ணீரோடு சிரிப்பாய் !




ஒருஜான் இடைவெளியில் அமர்திருந்தலும் 
ஸ்பரிசத்தை கண்களிலே பகிர்வோமே 
வ்ருக்ஷமாய் நம்பிக்கை துளிர்க்கும் 
அந்த நொடியில் உணர்வோமே ..!

அது காதல் !



5 comments:

  1. Wow. Nice. Aththanaiyum unmai. Vaalththukkal ullame. My site: http://newsigaram.blogspot.com

    ReplyDelete
  2. மிகவும் ரசித்தேன்... காதலின் பரிணாமங்களை அருமையாக எடுத்துரைத்திருந்த கவிதைகள்...
    ஒருஜான் இடைவெளியில் அமர்திருந்தலும்
    ஸ்பரிசத்தை கண்களிலே பகிர்வோமே
    வ்ருக்ஷமாய் நம்பிக்கை துளிர்க்கும்
    அந்த நொடியில் உணர்வோமே ..!

    அது காதல்...////

    மிக மிக மிக ரசித்தேன்... அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்...

    ReplyDelete